search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று விவசாயிகள் கடை அமை க்காமல் உழவர் சந்தை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் உயர்மட்டக்குகுழு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தெரிவிக்கையில், உழவர் சந்தை வாசலிலேயே ஏராள மானோர் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். தற்போது பழனி காந்தி மார்க்கெட் கடைகள் அகற்றப்பட்டு அவர்களு க்கும் உழவர் சந்தையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டு ள்ளது.

    மேலும் உழவர் சந்தை வாசலில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே உழவர் சந்தை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களை அகற்ற வேண்டும். அது வரை தாங்கள் கடைகளை திறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இது குறித்து ஓரிரு நாளில் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் உறுதிமொழியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×