என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமாங்காய்களுக்கு உரிய விலை பெற்று தர விவசாயிகள் கோரிக்கை
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.
- பயிர் செய்வதற்கான தொகை, இழப்பீடு உள்ளிட்டவையை வனத்துறையினர் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஏற்கனவே கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வழங்கி மனுக்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையம் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. இதனால் மாவிவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அடுத்த மாதம் இறுதியில் மா முத்தரப்பு கூட்டம் நடத்தி, மாங்காய்களுக்கு உரிய விலையை பெற்று தர வேண்டும். மேலும், மாவட்டத்தில் மா எவ்வளவு உற்பத்தியாகிறது என்பதை ஆய்வுகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்று நீரை, மாவட்டத்தில் பு-ஞ்சை நிலங்களில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியங்களை, கூட்டம், கூட்டமாக வரும் மயில்கள், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிலத்தில் பயிர் செய்வதற்கான தொகை, இழப்பீடு உள்ளிட்டவையை வனத்துறையினர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-
ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது கால்நடைகளை நோய் தாக்கியதால், பால் வரத்து குறைந்துள்ளது. இதனால் சில தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். பாலுக்கு உற்பத்தி மானியம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்படும். ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






