என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
    X

    விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

    • விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில மகளிர் அணிசெயலாளர் முத்துலட்சுமி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன பெண்ணங்கூர் காய்கறி மார்கெட் அருகில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

    இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அவை தலைவர் ராமன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மகளிர் அணிசெயலாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில மகளிர் அணிசெயலாளர் முத்துலட்சுமி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இந்த போராட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாகராணி சமுக ஆர்வலர்கள் நாகராஜ் ரெட்டி , பெருமாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    முன்னதாக விவசாயிகளின் உரிமைக்காக பேnராடி உயிர்நீத்த விவசாயிககளின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×