search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி
    X

    வானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

    • வானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
    • வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உப்பு வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50) விவசாயி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் வெங்கடேசன் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளார். அந்த பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிக அளவில் இருந்து வந்துள்ளது. காட்டு பன்றிகளின் தொல்லையால் விளை நிலங்களில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை உள்ளி ட்டவைகளை நாசம் செய்து வந்தது. இதனால் வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்தார். நேற்றுவெங்கடேசன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக கவனிக்காமல் தான் வைத்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை என்று வீட்டிலிருந்து உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கடேசன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கிளியனூர் போலீஸ் இ ன்ஸ்பெக்டர் பாலமுரளி சப்இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×