search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே மொபட் மீது அரசு பஸ் மோதல்-விவசாயி பலி
    X

    களக்காடு அருகே மொபட் மீது அரசு பஸ் மோதல்-விவசாயி பலி

    • நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழக்கள்ளிகுளத்தை சேர்ந்தவர் நம்பி (வயது60). விவசாயி. இவருக்கு அருணாச்சலம் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கல்லடி சிதம்பரபுரம் ரோட்டில் சென்ற போது எதிரே களக்காடு நோக்கி வந்த அரசு பஸ், நம்பி சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அவரது மகன் முப்பிடாதி களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் இதுதொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த களக்காடு புதுத்தெருவை சேர்ந்த இம்மானுவேல் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×