என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயமங்கலம் அருகே விவசாயி பைக் திருட்டு
    X

    கோப்பு படம்.

    ஜெயமங்கலம் அருகே விவசாயி பைக் திருட்டு

    • மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    ஜெயமங்கலம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45). இவருக்கு அழகர்நாயக்கன்பட்டி சாலையில் தோட்டம் உள்ளது. அங்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தின் முன்பு நிறுத்தி சென்றார்.

    மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×