search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுபோட்டி
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுபோட்டி

    • கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.
    • சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்

    திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 28ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளி யின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

    மாவட்ட முதன்மை க்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடி ப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000-, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவு ள்ளன.

    இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×