என் மலர்tooltip icon

    ஈரோடு

    கணவருடன் மொபட்டில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 45). இவர் இன்று காலை தனது கணவருடன் சென்னிமலை அருகே உள்ள மேலப் பாளையத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    மொபட்டை அவரது கணவர் ஓட்ட பின்னர் ஜெயந்தி அமர்ந்து சென்றார்.

    இன்று காலை 9மணிக்கு அவர்கள் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் மொபட் உரசியது. இதில் மொபட்டின் பின் பகுதியில் உட்கார்ந்திருந்த ஜெயந்தி நிலை தடுமாறி மொபட்டிலிருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் மீது லாரி ஏறியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கணவர் கண்முன் மனைவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான மனைவி உடலை பார்த்து கணவர் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    பவானிசாகர் அணை பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் தெங்குமஹாடா மாயாறும் மேட்டுப்பாளையம் பவானி ஆறும் கலக்கும் இடத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது.

    அணையின் நீர்த்தேக்கப் பகுதியான சித்தன்குட்டை வனத்தில் இருந்து ஏராளமான யானைகள் பவானி ஆற்றுப்படுகையில் தண்ணீர் குடிக்க வந்து செல்லும்.

    யானைகள் குட்டியுடன் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் போது சமீபகாலமாக முதலைகளால் தாக்கப்படுகின்றன. சித்தன்குட்டை ஆற்றுப் படுகையில் முதலைகள் அதிகளவில் நடமாடுவதால் முதலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சித்தன்குட்டை நீர்ப்பிடிப்பு பகுதியில் மீனவர்கள் மாலை நேரங்களில் பரிசலில் சென்று மீன்வலை விரித்துவிட்டு அதிகாலை நேரங்களில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரத்தில் திருட்டு மீன் பிடிக்கும் கும்பலை கண்காணிக்கும் மீன்வர் குழுவினர் நீர்தேக்கப் பகுதியில் சமையல் செய்து சாப்பிட்டு இரவுநேர காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது முதலைகள் அதிகளவில் நடமாடுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். முதலைகள் நடமாட்டத்தால் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்குமாறு பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் முதலைகள் நடமாட்டத்தையொட்டி பவானிசாகர் அணை பகுதியில் வனத்துறையினர் இரவு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். திருட்டுத்தனமாக மீன் பிடிக்கும் கும்பலும் முதலையிடம் சிக்கிவிட கூடாது எனவும் கண்காணித்து வருகிறார்கள்.
    ஈரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாப உயிர் இழந்தார். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செயள்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி எஸ்.எஸ்.வி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரதுமகன் முருகன் (வயது 30) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று வேலைக்கு சென்ற முருகன் மாலையில் வீடு திரும்பினார். அவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்று மேட்டில் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது அவர் திடீர் என்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு அவரதுதந்தை கிருஷ்ணன் வந்து பார்த்த போது கிணற்று மேட்டில் உட்கார்ந்து இருந்த மகனை காணவில்லை.

    இதனால் கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது தனது மகன் முருகன் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதை பார்த்த கிருஷ்ணன்அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இது பற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரி காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடி தண்ணீர் உள்ள அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி முருகனை மீட்டனர். இருப்பினும் அவர் கிணற்றுக்குள்ளே இறந்து விட்டார்.

    இதனால் முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது,

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செயள்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் பெண் என்ஜினீயர் தற்கொலையில் சமையல்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய வலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி தேன்மொழி (வயது 32). இவர் பி. டெக். படித்துள்ளார்.

    கணவர் மாதேஸ்வரன் துபாயில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5½ ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    தேன்மொழி சில தினங்களுக்கு முன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதன்பிறகு தேன்மொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தேன்மொழியின் தந்தை சின்னப்பன் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த பஷீர் சேட் (வயது 31). சமையல்காரர். இவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இவர் தேன்மொழியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது.

    அதன் பேரில் போலீசார் பஷீரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    பவானி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

    ஈரோடு:

    நசியனூர் அருகே உள்ள வேட்டுவபாளைத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பூஜா (வயது 14). இவர் திண்டலில் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் நன்றாக படிக்கும் இவர் தேர்வின்போது ஒருவித படபடப்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூஜா ஆஸ்பத்திரியில் மனநல ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பூஜா தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துப்பாட்டாவால் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நேரத்தில் வெளியில் சென்று இருந்த அவரது தாயார் வீட்டுக்கு வந்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது பூஜா தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பூஜாவின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று பெருந்துறை புது பஸ் நிலையத்தில் ஈரோடு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது இவரது அருகில் வந்த 2 பேர் சுரேசின் சட்டைப்பையில் இருந்த ரூ.875-ஐ நைசாக திருடினர்.

    இதை கவனித்து விட்ட சுரேஷ் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். பிறகு சுரேஷ் மற்றும் அங்கு நின்றவர்கள் பணத்தை திருடி கொண்டு ஓடிய 2 பேரை விரட்டிபிடித்தனர்.

    இதன்பிறகு அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த ஆசிப் ராஜா (25), அஜ்மல் கான் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.

    இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    சத்தியமங்கலத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலததில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் உள்பட 2 இடங்களில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் பாதிக்கப்பட் டதாகவும் இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

    மேலும் அந்த பகுதியில் சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனரிடம் கேட்ட போது கூறியதாவது:-

    சத்தியமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் நகர் உள்பட 2 இடங்களில் 2 பேர் வைரஸ் காய்ச்சலால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் குணமடைந்து இப்போது வீடு திரும்பி உள்ளனர்.

    இருப்பினும் சத்தியமங்கலம் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சென்று முகாமிட்டு உள்ளனர்.

    அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கு தேங்கி உள்ள மழை தண்ணீரை அகற்றுவது, கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது மற்றும் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கங்கல் பாளையம், கே.ஏ.எஸ்.நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    இதே போன்று சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி தற்கொலை செய்ய முடிவெடித்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மனைவியுடன் தோட்டத்தில் பூ பறித்தவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள மாரபோயன் கரடுகக்கரா குட்டையை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது47). இவரும் இவரது மனைவி கண்ணம்மாள் (37) மற்றும் தாயார் பெரியம்மாளும் தங்களது தோட்டத்தில் கோழிகொண்டை பூ பறித்துக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது கீழே ஊர்ந்து சென்ற ஒரு வி‌ஷப்பாம்பு கருப்புசாமியை கடித்து விட்டது. இதில் வலியால் துடித்த அவரை பக்கத்து தோட்டத்துக்காரரின் உதவியுடன் ஒருகாரில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருப்புசாமி பரிதாபமாக இறந்தார்.

    தன் கண்முன் பாம்பு கடித்து கணவர் இறந்ததை கண்ட மனைவி கண்ணம்மாளும், தாயார் பெரியம்மாளும் கருப்புசாமி உடலை பார்த்து கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.

    கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரித்து வருகிறார்.

    அம்மாப்பேட்டை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாப்பேட்டை அருகே உள்ள ஊமா ரெட்டியூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் நவின்குமார் (வயது 24).

    தந்தை சின்ராஜ் இறந்து விட்டதால் நவின் குமார் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். நவின்குமார் அங்குள்ள மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு இவர் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டாராம். இது தொடர்பாக அவரது தாயாரிடம் அவர் தகராறு செய்தார்.

    அப்போது திடீர் என்று நவின் குமார் ஓடிசென்று தனது வீட்டின் அருகே 50 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து விட்டார்.

    இதில் பலத்த அடிபட்ட அவர் பரிதாபமாக இறதார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு அதிகாரி ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்து நவின் குமாரின் உடலை மீட்டனர்.

    இதன்பிறகுஅவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அம்மாப் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானி:

    பவானி அருகே உள்ள நசியனூர் அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 14). இவர் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டார்.

    பூஜாவுக்கு 7, 8-ம் வகுப்பு போதே பரீட்சை என்றால் ஒரு வித பதட்டமும் பயமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக 9-ம் வகுப்புக்கு பரீட்சை வந்தால் எப்படி? எழுவது என்ற பயத்துடனேயே சென்று வந்தாராம்.

    இதற்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் மன நல ஆலோசனை கேட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அவரது அம்மா மற்றும் தங்கை ஈரோடு மருத்துவமனைக்கு சென்று விட்டார்கள். வீட்டில் யாரும் இல்லை. தனிமையில் இருந்த பூஜா வீட்டில் இருந்த பேனில் தனது துப்பட்டாவில் தூக்கு மாட்டி கொண்டார்.

    வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்திருந்த அவரது அம்மா வீடு பூட்டி இருந்ததை பார்த்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்க வில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகள் பூஜா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு சப்- இன்ஸ்பெக்டர் சஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இளங்கோவன் மீது பொய் வழக்கு தொடர்ந்த இளைஞர் காங்.தலைவரை கட்சியை வீட்டு நீக்கவேண்டும் என ஈரோடு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நடந்தது.

    மண்டல தலைவர்கள் ஜெயபால், ரவி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் ஜே.சுரேஷ், மாவட்ட மகளிர் தலைவி ஆர்.புவனேஸ்வரி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சின்னசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் கே.என்.பாட்சா, செயலாளர் முகமதுஅர்சத் உள்படபலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனைஏற்பட்ட போதெல்லாம் கட்சி தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பேற்று கட்சியை வளர்த்தவர். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசை 3-வது பெரிய கட்சியாக உருவாக்கியவர்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன் மற்றும் அவரது கூட்டாளிகளும் நுழைந்து ரவுடித்தனம் செய்தனர். அவர்களை இளங்கோவன் இதுகட்சிகட்டுப்பாட்டை மீறிய செயலாகும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

    ஆனால் அவர் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தாக்க முற்பட்டார்கள் என்றும் போலீசில் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்த பொய்யான குற்றச் சாட்டை கூறிய விஜய் இளஞ்செழியனை வன்மையாக கண்டிப்பதோடு அவரை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் இதை வலியுறுத்தி கேட்டு கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ×