என் மலர்
செய்திகள்

பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பி கைது
பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33) விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று பெருந்துறை புது பஸ் நிலையத்தில் ஈரோடு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார்.
அப்போது இவரது அருகில் வந்த 2 பேர் சுரேசின் சட்டைப்பையில் இருந்த ரூ.875-ஐ நைசாக திருடினர்.
இதை கவனித்து விட்ட சுரேஷ் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். பிறகு சுரேஷ் மற்றும் அங்கு நின்றவர்கள் பணத்தை திருடி கொண்டு ஓடிய 2 பேரை விரட்டிபிடித்தனர்.
இதன்பிறகு அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த ஆசிப் ராஜா (25), அஜ்மல் கான் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.
இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33) விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று பெருந்துறை புது பஸ் நிலையத்தில் ஈரோடு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார்.
அப்போது இவரது அருகில் வந்த 2 பேர் சுரேசின் சட்டைப்பையில் இருந்த ரூ.875-ஐ நைசாக திருடினர்.
இதை கவனித்து விட்ட சுரேஷ் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். பிறகு சுரேஷ் மற்றும் அங்கு நின்றவர்கள் பணத்தை திருடி கொண்டு ஓடிய 2 பேரை விரட்டிபிடித்தனர்.
இதன்பிறகு அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த ஆசிப் ராஜா (25), அஜ்மல் கான் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.
இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






