என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீப கம்பத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
    X

    தீப கம்பத்தில் தீபம் ஏற்றி வழிபாடு

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் கோவில் உலா நடந்தது.
    • டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழாவினை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் கோவில் உலா நடந்தது.

    அதை தொடர்ந்து 6.20 மணிக்கு சென்னிமலை முருகன் கோவில் ராஜகோபுரம் முன்பு உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு 60-ம் படி என்று சொல்லப்படுகிறது 60 திருப்படிகளில் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை நடந்தது.

    இரவு 8 மணிக்கு முருகப்பெருமான் மூலவருக்கு அபிேஷகம், அதை தொடர்ந்து மகா தீபாரதனையும், திருகார்த்திகை தீப விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது. முருங்கத்தொழுவு பிரலிங்கேஸ்வரர் கோவி லிலும் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கூத்தப்பனை கொழுத்தப்பட்டது.

    Next Story
    ×