என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை
- கீதாலட்சுமி கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தி கோம்புபள்ளம் செக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மனைவி கீதா லட்சுமி(49). ராமமூர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.
கணவர் இறந்ததில் இருந்து மனவேதனையுடன் இருந்த கீதாலட்சுமி வீட்டின் படுக்கை அறையில் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






