search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு
    X

    கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன வாய்கால்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

    கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு

    • முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்கால்கள் மூலம் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்பேரில் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 200 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை பொறியாளர் சதீஸ், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் விவசாயிகள் திறந்து வைத்தனர்.

    மேலும் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வணங்கினர். இந்த முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    Next Story
    ×