என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு-கோபியில் கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி
    X

    ஈரோடு-கோபியில் கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி

    • ஈரோடு-கோபியில் கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது
    • பயிற்சி ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

    ஈரோடு,

    கலைஞர் உரிமை திட்டம் தொடர்பாக கோபி சரகம் மற்றும் ஈரோடு சரகத்துக்குட் பட்ட ரேசன் கடை விற்ப னையாளர்களுக்கான பயிற்சி கோபி மற்றும் ஈரோட்டில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராஜ் குமார் தலைமை யில் நடந்தது. இதில் ஒரு குடும்பத்துக்கு ஒரு விண்ணப்பம் மட்டும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும். காலை மற்றும் மாலை என இரு நேரங்க ளிலும் படிவம் வழங்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரேசன் கடை விற்பனையாளர்க ளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    பயிற்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்மு க உதவியாளர் (பொது) கணே ஷ், கூட்டுறவு சங்கங்க ளின் துணைப் பதிவாளர் நர்மதா, பொது வினியோக திட்ட துணைப் பதிவாளர் கந்தசாமி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் பாலாஜி, பொது வினியோக திட்ட கண்காணி ப்பாளர் கிருபாகரன், பொது வினி யோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவல ர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×