என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு
    X

    திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

    • பவானி நகராட்சி பகுதியில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன் ஆய்வு செய்தார்.
    • வரி வசூல் செய்யும் அலுவலர்களுடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    பவானி:

    பவானி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன் பவானி நகராட்சிக்கு வருகை தந்தார்.

    இதனையடுத்து வருகை தந்த அவர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனுசுயா கூடுதல் பிரசவ விடுதி கட்டுமான பணி,

    தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய கழிப்பிட கட்டுமான பணி, 4-வது வார்டு புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் உரக்கி டங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் 3 நாட்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்துதல் காரணமாக பவானி நகராட்சி கணினி மையம் செயல்படாதது என அறிவிக்கப்பட்ட நிலையில் வரி வசூல் செய்யும் அலுவலர்கள் பொதுமக்களிடையே 3 நாட்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்து பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது மேலாளர் (பொறுப்பு) வெங்கடேசன், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ரவி, துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன் உள்பட நகராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×