search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரில் மூழ்கிய வாலிபர் உடல் இன்று மீட்பு
    X

    நீரில் மூழ்கிய வாலிபர் உடல் இன்று மீட்பு

    • பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது.
    • அப்போது வாலிபர் உடல் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ் குமார்(18).

    தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த இவர் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீனா, பிரசாந்த், நிஷாந்த் ஆகிய 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வழியில் உள்ள சுஜில் குட்டை பகுதிக்கு சென்று அங்கு நாகராஜ் என்பவரது பரிசலில் ஏரி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பரிசலில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கரிமொக்கை என்ற இடத்தில் சென்ற போது காற்று வேகமாக வீசியதால் அணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட அலை காரணமாக திடீரென பரிசல் நீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் நித்திஷ்குமார் அணை நீரில் மூழ்கி மாயமானார்.

    உடன் வந்த நண்பர்கள் 4 பேருக்கும் நீச்சல் தெரிந்ததால் அப்பகுதியில் அருகே சென்று கொண்டிருந்த அய்யாசாமி என்பவரின் பரிசலில் ஏறி உயிர் தப்பினர்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார், தீயணைப்பு துறையினர், அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி மாயமான நித்திஷ்குமாரை தேடி வந்தனர். 2 நாட்களாக இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த வாலிபர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக தீயணைப்பு துறையினர் மீனவர்கள் உதவியுடன் தேடினர். அப்போது நித்தீஷ்குமார் உடல் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×