search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • கோபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைரா பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கோபால் (35). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சந்தியா என்ற மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக கோபால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கோபால் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனப் பிரியா கோபாலை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதில் மனவேதனை அடைந்த கோபால் ஓயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×