search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நல்லாந்தொழுவு டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (26). கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கோகுல்ராஜின் தாய் லதா, கோகுல்ராஜை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் தகவல் அறிந்து கோகுல்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×