என் மலர்
உள்ளூர் செய்திகள்

நம்பியூரில் தனியார் ஸ்பின்னிங் மில் தூய்மைப் பணியாளர் திடீர் சாவு
- நம்பியூரில் தனியார் ஸ்பின்னிங் மில் தூய்மைப் பணியாளர் திடீர் உயிரிழந்தார்
- இதுகுறித்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சின்னரங்கன் (வயது 63). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் கடந்த பல வருடங்களாக தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று, ஓய்வில் இருந்த சின்னரங்கன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் மீண்டும் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னரங்கன் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறிக் கொண்டிருந்தவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சின்னரங்கன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






