என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.4 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
- வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
- ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ஒரு கிலோ கதலி 20 ரூபாய்க்கும், நேந்திரம் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் பூவன் தார் ஒன்று 330 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 670 ரூபாய்க்கும், தேன் வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 280 ரூபாய்க்கும், ரொபஸ்டோ தார் ஒன்று 380 ரூபாய்க்கும், ரஸ்தாலி தார் ஒன்று 560 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் 3 ஆயிரம் வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story






