search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிட்டர் தந்தையின் வீட்டில் 25 பவுன் தங்க நகை கொள்ளை
    X

    ஆடிட்டர் தந்தையின் வீட்டில் 25 பவுன் தங்க நகை கொள்ளை

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோ வில் அடுத்துள்ள எலிஸ் பேட்டை பகுதியை சேர்ந்த வர் சக்திவேல். இவர் ஈரோ ட்டில் ஆடிட்டராக பணியா ற்றி வருகிறார்.

    இவரது பெற்றோர் சாமியப்பன், சரஸ்வதி அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் விட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாமியப்பன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிச் சென்று ள்ளனர்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்த சாமியப்பன், சரஸ்வதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொ ள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து காஞ்சிக்கோ யில் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×