என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- குடிநீர் வழங்க கோரி நடந்தது
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரத நல்லூர் அடுத்த கூலிக்காரன் பாளையம், பொரட்டு க்காட்டூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் கிடைக்க வில்லை என கூறப்படு கிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் கூலிக்காரன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிராம ஊராட்சி மாரிமுத்து மற்றும் வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நட வடி க்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்