search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்
    X

    பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

    • பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
    • அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை கொடுத்துள்ள 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர் விண்ணப்பத்தில் ஒருசிலரை மட்டும் சேர்த்துவிட்டு ரசீது போடப்பட்டது.

    மேலும் ரசீது போடாத மீதமுள்ள உறுப்பினர் சேர்க்கையை முழுவதும் முடிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    பின்னர் பேச்சு வார்த்தையில் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், சம்பத், ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் ராஜி, மாவட்ட துணைச்செ யலாளர் செங்கோட்டையன், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×