search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 3 மாணவர்கள் காயம்
    X

    பள்ளி வேன் ரெக்கவரி வேன் மூலம் அப்புறப்படுத்திய போது எடுத்த படம்.

    ரோட்டில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 3 மாணவர்கள் காயம்

    • ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
    • போலீசார் டிரைவர் கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு திண்டல் வள்ளி புரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளி வேனில் வழக்கம் போல் இன்று காலை பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது. ேவனை ஈரோடு கருங்க ல்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி ஓட்டி வந்துள்ளார். இந்த வேனில் உதவியாளர் சசிகலா மற்றும் 14 மாணவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து பள்ளி வேன் பவானி- அந்தியூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. வேன் அந்தியூர் பிரிவு பகுதியில் வரும் போது எதிர்பாராத விதமாக திடீரென ரோட்டில் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அலறினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை யடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் இருந்த மாணவ, மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    இந்த விபத்தில் பவானி, வர்ண புரம் 5-வது வீதியை சேர்ந்த மாணவி அனுஸ்ரீ (13), பவானி பழனிபுரம் பகுதி யை சேர்ந்த மாணவி தக்க்ஷாநிதி (11), வாய்க்கால் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகவா (4) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பவானி போலீசார் டிரைவர் கார்த்தி யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளிக் குழந்தைகளை ஏற்றுக் கொண்டு வந்த பள்ளி வேன் ரோட்டின் பக்கவாட்டுச் சுவரில் மோதி கவிந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பவானி பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×