என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏழரை சனி தோஷத்துக்கு பயந்து விசைத்தறி அதிபர் தற்கொலை
- தனசேகர் நள்ளிரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை, அடுத்துள்ள அண்ணாநகர், மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (44). இவர் இப்பகுதியில் விசைத்தறி ஆலை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களாக தனது மனைவி ஜமுனாவிடமும், பெற்றோர்களிடமும், தனக்கு ஜாதகத்தில் ஏழரை சனி நடக்கிறது.
அதனால் ஏதேனும் விபரீதம் நடக்கும் என கூறி பயந்து வந்தார். அவருக்கு ஒன்றும் நடக்காது என்று அவர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு தனசேகர் காய்ச்சலால் அவதிப்பட்டு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு டாக்டரிடம் சென்று வந்தவர் வீட்டில் படுத்து தூங்கினார்.
இந்நிலையில் தனசேகர் நள்ளிரவு திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






