search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை

    • துரைசாமி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குமாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பூந்துறை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் துரை சாமி (வயது 40). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நந்தினி (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    துரைசாமிக்கு அடிக்கடி மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலை யில் சம்பவத்தன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த துரைசாமி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி கொண்டார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவ ர்கள் அவரை மீட்டு தனி யார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் துரைச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து நந்தினி அரசலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×