search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து தகராறில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    சொத்து தகராறில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

    • சிவக்குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதுரை சேர்ந்தவர் ராஜன் மகன் சிவகுமார் (வயது 50). இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்த சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் அய்யாசாமி சூர்யா திங்களூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×