search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    • விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அருகே மாமரத்து பாளையம் 1-வது தெரு லட்சுமி நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் விஸ்வநாதன் (வயது 79). இவரது மனைவி ஞானசுந்தரி.

    இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஸ்வநாதன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தவர் ஆவார். இதையடுத்து விஸ்வநாதன் அவரது உறவினர் மோகனாம்பாள் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    விஸ்வநாதன் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து மோகனாம்பாள் சித்தோடு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×