என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
- தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (62). இவரது மனைவி பெரிய நாயகி (57). இவர்களது மகன் சென்னை யில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகள் அருகிலேயே வசித்து வருகிறார்.
பெரியநாயகி தனது மகனை பார்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை சென்றுவிட்டார்.வீட்டில் இருக்கும் அண்ணா துரைக்கு அருகில் வசிக்கும் அவரது மகள் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
அண்ணாதுரை ஏலச்சீ ட்டு நடத்தி வந்ததாகவும், அவருக்கு சூதாடும் பழ க்கமும், மது அருந்தும் பழ க்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பண ப்பிரச்னையில் இருந்ததா கவும் தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணாதுரைக்கு சாப்பாடு கொடுக்க அவரது மகள் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் தனது கணவரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தூக்கு மாட்டிய நிலையில் அண்ணாதுரை தொங்கி தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அண்ணா துரை இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்