என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி
    X

    வடமாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    Next Story
    ×