என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில தொழிலாளி சாவு
    X

    வட மாநில தொழிலாளி சாவு

    • நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி லாரிக்குள் விழுந்தார்.
    • இச்சம்பவத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ெரயில் நிலையம் எதிரில் உள்ள சென்னிமலை சாலையில் இன்று அதிகா லை ஒரு விறகு லாரி செ ன்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி லாரிக்குள் விழுந்தார்.

    இதில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நேரிட்ட இச்சம்பவத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் சூரம்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு ஈரோ டு அரசுத் தலைமை மருத்து வ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த தகவல்களும் தெரியவி ல்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×