என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
    X

    பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    • பெரியூர் பகுதியில் உள்ள வீதிகளில் குரங்குகள் நடமாடி வருகின்றன.
    • குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அடுத்து பெரியூர் கிராமம் உள்ளது. இந்த பகு தியில் கடந்த சில நாட்களாக 2 குரங்குகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    நேற்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் அந்த 2 குரங்கும் புகுந்தது. இதனால் மாண வர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    இதேபோல் பெரியூர் பகுதியில் உள்ள வீதிகளில் குரங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் பெண்கள் அச்சத்துடனே வெளியே சென்று வருகின்றனர்.

    சில சமயம் குரங்கு அவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்ச த்துடன் உள்ளனர். குழந்தைகள் ஏதாவது கடையில் பொருட்களை வாங்க சென்றால் அதனை அந்த 2 குரங்குகள் பறித்து கொண்டு ஓடி விடுகிறது.

    மேலும் வீடுகளுக்கு புகு ந்து உணவு பொருட்களை சாப்பிட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அப்பகுதி மக்கள் எவ்வளவு விரட்டினாலும் அந்த கிராம த்தை விட்டு குரங்குகள் வெளியேறவில்லை.

    இதனால் வனத்துறை யினர் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×