என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சாரம் தாக்கி ஆண் மயில் பலி
Byமாலை மலர்3 July 2023 3:29 PM IST
- மின்சாரம் தாக்கி ஆண் மயில் பரிதாபமாக இறந்தது
- வனத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.
ஈரோடு,
ஈரோடு, சங்க நகர் 7-வது வீதி, தென்றல் நகரில் இன்று காலை ஆண் மயில் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயரில் ஆண் மயிலின் தோகை எதிர்பாராத விதமாக பட்டது.
இதனை அடுத்து மின்சாரம் தாக்கி ஆண் மயில் கீழே விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆண் மயில் பரிதாபமாக இறந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.
Next Story
×
X