search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன்
    X

    கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன்

    • கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கபட்டது
    • விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்

    கவுந்தப்பாடி,

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தலைவர், வாடிக்கை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் கவுந்த ப்பா டி நெசவாளர் கூட்டு றவு சங்க உறுப்பினர்கள், க.புதூர் காஞ்சிகோவில், செந்தாம் பாளையம் கலை வாணர், தர்மபுரி திருவள்ளு வர், கவுண்ட ம்பாளையம் காமராஜர் சங்கம் மற்றும் நல்லா கவுண்டன்பாளையம் நல்லி டெக்ஸ் ஆகிய நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 60 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.30 லட்சம் கடன் வழங்க ப்ப ட்டது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்.

    கவுந்தப்பாடி கிளை மேலாளர் வேலுமணி வர வேற்றார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்க மணி, மாவட்ட கவுன்சிலர் சிவ காமி சரவணன், கவுந்த ப்பாடி நெசவாளர் கூட்டு றவு சங்க தலைவர் மாதே ஸ்வரன், ஓடத்துறை திரு வேங்கடம், அய்ய ம்பாளையம் ரவிச்சந்திரன், மணல் சோமு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள், கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகள் கடன் மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேற்பார் வையாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×