என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிச்சி அரசு பள்ளியில் நாற்காலிகளை உடைத்து அட்டகாசம்
    X

    வகுப்பறையில் உள்ள மின்விசிறி சேதப்படுத்தி உள்ள காட்சி.

    குறிச்சி அரசு பள்ளியில் நாற்காலிகளை உடைத்து அட்டகாசம்

    • பள்ளி வளாகத்துக்குள் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குறிச்சி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள பள்ளி வளாகத்திற்குள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி கட்டிடங்களும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை யிலான உயர்நிலைப் பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடங்களும் உள்ளன.

    இங்கு தொடக்கப்பள்ளி யில் சுமார் 85 மாணவ, மாணவிகளும், உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகளும், உண்டு உறைவிட பள்ளியில் சுமார் 80 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்துக்குள் கடந்த சில நாட்களாக பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் பராமரிப்பு பணி முடிக்கப்பட்ட நிலை யில் வெளியில் அமைக்க ப்பட்டிருந்த மெர்குரி லைட் மற்றும் டியூப் லைட் ஆகியவற்றை சில சமூக விரோதிகள் கழட்டி எடுத்து சென்று விட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு வகு ப்பறைகளில் மின்விசிறி, டியூப் லைட், மேசை, ஷேர் ஆகிவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துச் சென்றுள்ளனர். அதே போல் ஆணுறைகள், சசுதாட்ட சீட்டுக்கட்டுகள் போன்றவையும் பள்ளி வளாகத்திற்குள் சிதறி கிடக்கின்றது.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் தளத்தில் உள்ள 10-ம் வகுப்பு வகுப்பறையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மேசையை சுற்றி சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை அப்படியே விட்டு சென்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அம்மாபேட்டை போலீ சார் விசாரணை செய்து வந்த நிலையில் தொடர்ந்து மீண்டும் சில நாட்களாக அருவருக்கத்தக்க சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்திற்குள் செய்து வருவது அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படு த்தியுள்ளது.

    மேலும் பள்ளி வளாக த்திற்குள் நடைபெறும் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே போலீசார் இரவு நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளிக்குள் வளாகத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பள்ளிக்கு இரவு காவலரை பணியமர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×