என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

    • பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து குட்டகம் கிரா மத்தில் பல நூறு ஆண்டு களாக எழுந்தருளி அருளா ட்சி செய்து வரும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவில்கள் உள்ளது.

    இதில் பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடை பெற்றது. மேலும் அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவிலுக்கு முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பட்டத்தரசி அம்மனுக்கு கடந்த 30-ந் தேதி விநாயகர் அணுக்கை பூஜையுடன் தொடங்கி அம்மன் ஊர்வ லம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மாலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

    மேலும் இரவு இரண்டாம் கால பூஜையும் நேற்று சிவாச்சாரியார் காயத்ரி மந்திரங்கள் முழங்க கோவில் பட்டத்தரசி அம்ம னுக்கு புனித நீரூற்றி சிறப்பு பூஜை செய்து கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் மீது புனித நீர் தீர்த்தம் தெளிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு பட்டத்தரசி அம்மனுக்கு பால், இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்பு பட்டத்தரசி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து அத்தனூர் அம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வ ங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×