என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட பெண்ணை மீட்ட டிரைவர்களுக்கு பாராட்டு
- கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்ணை மீட்ட டிரைவர்களுக்கு அந்தியூர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
- அந்தியூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் தேநீர் விருந்து கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
அந்தியூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கடந்த ஒரு ஆண்டாக தங்கி மைக்கேல் பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் இருந்து ஆட்டோவில் அந்த பெண், குன்னூரை சேர்ந்த ஜீவா (35) ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஆட்டோவில் பயணம் செய்த ஜீவா, அந்த பெண்ணை கழுத்தை கத்தியால் அறுத்ததார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஜீவா தப்பி ஓட முயன்றார்.
இதை கண்ட அக்கம்பக்க த்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கார், டெம்போ, டிராவல்ஸ் டிரைவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அந்த பகுதி பொதுமக்கள், மற்றும் கார், டெம்போ, டிராவல்ஸ் டிரைவர்களுக்கு அந்தியூர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அந்தியூரில் அவர்களுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் தேநீர் விருந்து கொடுத்து பாராட்டி கவுர விக்கப்பட்டது.






