search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் கருமாரியம்மன்.

    கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    • பக்தர்கள் கூடுதுறை சென்று தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
    • தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    பவானி:

    பவானி தேவபுரம் பகுதியில் கருமாரியம்மன், பண்ணாரி அம்மன், சமயபுரம் மாரியம்மன், ராஜ கணபதி, முருகன் கோவி ல்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடிக்கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் 13-ந் தேதி மூலவர் கருமாரியம்மனுக்கு பக்தர்கள் நேரடியாக சென்று புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கூடுதுறை சென்று தீர்த்த குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று மாலை திருவிளக்கு பூஜை ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் குழுவினர் மூலம் நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) கொடிக்கம்பம் காவிரி ஆற்றில் விட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவுக்கு வருகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாதுச்சாமி மற்றும் தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் சிந்துஜா முருகேசன், துணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் உள்பட விழா குழுவினர் பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×