search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை முயற்சி
    X

    ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை முயற்சி

    • ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.10 மணியளவில் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் வந்து நின்றது. பின்னர் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு ரெயில் கரூர் நோக்கி புறப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தூரத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில் மெதுவாக சென்றதால் அந்த பெண் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மேலும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அப்போது அந்த பெண் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×