என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கசிவு நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு சரி செய்யும் பணி தீவிரம்
    X

    கசிவு நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு சரி செய்யும் பணி தீவிரம்

    • காங்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
    • சிமெண்ட் கலவைகள் கொ ண்டு அடை க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வா ய்க்கால் நன்செய் பாசன த்திற்கு கடந்த 20-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக நீர்வரத்து உய ர்த்தப்பட்டது. 1,500 கனஅடி நீர் தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குருமந்தூ ர்-ஆண்டவர்மலை 29 மைல் பகுதியில் பழைய பாலத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் பொதுமக்கள், விவ சாயி கள் அதிர்ச்சி அடைந்த னர். பொதுப்பணி துறையி னர் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க சிமெண்ட் கலவைகள் கொ ண்டு அடை க்கும் பணியில் பொதுப்ப ணித்துறையினர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×