என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
- ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வுகட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இலக்குமிநரசிம்மன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வருகிற 9-ந் முதல் 13-ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வெப் கேமிரா புகைப்படத்துடன் தேர்வுகட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழுக்காக ரூ.100, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி திட்டத்தில் வரும் 15, 16-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






