என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
- சத்தியமங்கலத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
ஈரோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 45). இவருக்கு ஒரு மகளும், கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணன் (29) சத்தி யமங்கலம் ராஜ வீதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு வர்ஷிகா (5) என்ற மகளும், ரக்ஷித் (3) என்ற மகனும் உள்ளனர். கிரு ஷ்ணனுக்கு மதுக்கு டிக்கும் பழக்கம் இருந்து வந்து ள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடி க்கடி தகராறு ஏற்ப ட்டுள்து.
இதையடுத்து சத்தி யமங்கலத்தில் ஜீவாவின் தாய் வீட்டின் அருகில் வாடைகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ணன் குடித்து வந்த தால் ஜீவா கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நி லையில் மனைவி, குழந்தை கள் பிரிந்த சோக த்தில் கிரு ஷ்ணன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொ ண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரி வித்தனர். பின்னர் கிருஷ்ணனின் தாய் சுமதி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடு த்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.






