search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வேட்டி-சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்
    X

    இலவச வேட்டி-சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்

    • 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.
    • ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஈரோடு,

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளார்.

    தமிழகத்தில் விவசா யத்துக்கு அடுத்த படியாக ஜவுளி தொழிலில் விசை த்தறி தொழில் பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ கத்தில் 6 லட்சத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை சார்ந்து நேரடியாக வும், மறைமுகமாகவும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி தொழில் மிகவும் மோசமடைந்து குறிப்பாக நூல் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக விசைத்தறிகள் விற்பனைக்கு மற்றும் உடைக்கப்பட்டு இரும்பு வியாபாரத்திற்கும் சென்று கொண்டிருந்த தருவாயில் தமிழக அரசு நூல் விலை கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறு த்தல் அதன் விளைவாக தற்போது நூல் விலை நிலையாக உள்ளது.

    அதேபோல் செஸ்வரி போன்றவை விலக்கு மூலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் பெரும் பயன் பெற்று வந்தார்கள்.

    மேலும் விசைத்தறி யாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி போன்றவை தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் 63 ஆயி ரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி களின் மூலம் உற்பத்தி செய்து வரப்படுகிறது.

    கடந்த ஆண்டு வேட்டி, சேலை வடிவத்தில் சில மாறுதல் செய்யும் கார ணத்தால் சற்று தாமதமாக உற்பத்தி தொடங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி மற்றும் ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்பட்டு இதன் மூலம் பல விசைத்தறி உரிமையாளர்கள் தங்களு டைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் அழிந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டு அதன் பின் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களை கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் பொருட்டாக இலவச மின்சாரம் 750-ல் இருந்து 1000 யூனிட் ஆக வழங்க வேண்டும்.

    கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை கடந்த மார்ச் மாதம் பாதியாக குறைத்து விசை த்தறியாளர்களின் வாழ்வா தாரத்தில் விளக்கேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    வேட்டி, சேலை உற்பத்தி முடிந்த பின் பள்ளிச் சீருடை விற்பனை உற்பத்தி தொடங்கும். அதேபோல் இந்த வருடம் விசைத்தறியில் உற்பத்தி செய்ய கேஸ்மட் ரகம் மட்டும் 59,63077 மீட்டர்கள் வந்துள்ளது. இந்த உற்பத்தி என்பது விசைத்தறியாளர்கள் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விடுவார்கள்.பின் ஜூன் மாதத்தில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.

    எனவே தமிழக முதல்- அமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தை ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடித்து தரும் வகையில் மே மாத இறுதி க்குள் உற்பத்தி தொடக்கம் தொடர்பாக அரசாணை அறிவித்து அதன் பின் உற்பத்தி தொடர்பான நூல் டெண்டர், சைசிங் டெண்டர் போன்றவற்றை நிறைவு செய்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விசைத்தறி யாளர்களுக்கு உற்பத்தி ஆணை வழங்கி போர்க்கால அடிப்படையில் உற்பத்தியை தொடங்க தாங்கள் ஆணை பிறப்பித்து வாழ்வா தாரத்தை மேம்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×