என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகைக்காக குவிந்த வெளிமாநில வியாபாரிகள்
    X

    தீபாவளி பண்டிகைக்காக குவிந்த வெளிமாநில வியாபாரிகள்

    • தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.
    • மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வார முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.

    குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்த க்கொள்முதலில் வாங்கி சென்றனர்.

    நூல் விலை குறைவு காரணமாக இந்த வாரம் பனியன், துண்டு, பாவாடை போன்ற துணிகளின் விலை ரூ.5 வரை குறைந்துள்ளது.

    இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறு விறுப்பாக நடைபெற்றது.

    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது,

    கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த வாரம் ஜவுளி வர சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர்.

    சில்லரை வியாபாரம் 50 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடை பெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.

    இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்து ள்ளது. இதனால் அடுத்த 2 வாரம் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என்றனர்.

    Next Story
    ×