என் மலர்
உள்ளூர் செய்திகள்

தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்
- விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
- முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, ஆக. 29-
தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.