என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகள்
- அரசு ஆண்கள் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
- இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. ஆனால் மாலை நேரத்தில் மாவட்ட த்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து ஒரு சில நாட்கள் மழை இல்லாமால் இருந்தது. இந்நிலையில் கட ந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை யும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.
இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
மேலும் பல பகுதிகளில் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காண ப்படுகிறது. மூலப்பட்டறை பார்க் ரோடு, கிருஷ்ண செட்டி ரோடு வழியாக பஸ் நிலையம் உள்பட பல் வேறு பகுதிகளுக்கு வாகன ங்கள் சென்று வருகிறது.
மழை காணமாக அந்த பகுதியில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறா ர்கள். மேலும் அந்த வழி யாக வாகனங்கள் செல்லும் போது தேங்கி கிடக்கும் மழைநீர் பொது மக்கள் மீது படுகிறது.
இதனால் பொதுமக்கள் ஒரு வித தயக்கத்துடனே சென்று வருகிறார்கள். இதே போல் பார்க் ரோட் டில் இருந்து கருங்கல்பாளையம் காமராஜர் அரசு ஆண்கள் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் குப்பக்காடு பகுதியில் உள்ள மண் ரோட்டில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதைபோல் வீரப்பன்சத்தி ரம் பகுதியில் மழை நீர் ேதங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதே போல் மஜித் அருகே உள்ள ஒட்டுக்கார சின்னையா வீதி, கருங்க ல்பாளையம், வீரப்பன்ச த்திரம், சூரம்பட்டி, பன்னீர் செல்வம் பார்க் பகுதி உள் பட நகரின் பல பகுதிக ளில் ரோடுகள் சேறும், சக தியுமாக காட்சி அளிக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழி யுமாக ேசறும், சகதியுமாக காட்சி அளிக்கும் ரோடு களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.






