என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை சாலையோரம் வீசும் அவலம்
    X

    விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை சாலையோரம் வீசும் அவலம்

    • கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    • இதனால் கத்திரிக்காய்களை விவசாயிகள் ரோட்டோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருகிறார்கள்.

    தாளவாடி:

    தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள்.

    மேலும் மலை கிராம ங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடு வது வழக்கம்.

    இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய்களை கொள்முதல் செய்ய பெரும்பாலான வியாபாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் கூறினர்.

    ஆனால் வியாபாரிகள் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் கத்திரிக்காய்களை விவசாயிகள் ரோட்டோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

    4 மாத பயிரான கத்திரிக் க்காய் நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.15 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

    ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ .3 முதல் ரூ.4 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    அதிக விளைச்சல் உள்ளது என கூறி குறை வைான விலைக்கு வியா பாரிகள் கேட்கின்றனர். வியாபாரிகள் குறைநத விலைக்கு கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்ப தில்லை என்றனர்.

    மேலும் விவசாயிகள் கூறும் போது, விலை வீழ்ச்சியால் பழுத்த கத்திரிக் காய்களை பறித்து குப்பை யில் கொட்டி வரும் நிலை உருவாகி உள்ளது.

    சிலர் அப்படியே செடியில் விட்டு விடுகின்ற னர். விவசா யத்தை நம்பி இருந்தால் கடன் தொல்லை யால் அவதிபட வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவ சாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி செல்லவேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×