என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை குறித்து பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்
    X

    சிறுத்தை குறித்து பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்

    • சென்னிமலை பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை பெருந்துறை ஆர்.எஸ். பண்ணை நகரில் இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது
    • அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்க ளில் யாரும் பதிவிட வேண்டாம்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை யை பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    சிலர் மற்ற இடங்களில் எடுத்த சிறுத்தை படங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு அது அரச்சலூர், சென்னி மலை, பெருந்துறை உள்ளி ட்ட பகுதிகளில் எடு த்தது போல் பரப்பி விடுகி ன்றனர்.

    அங்கு சிறுத்தை வந்ததற்கான எந்த கால் தடமும் அடையாளமும் இல்லை. இதனால் வன த்துறையினருக்கு சிறுத்தையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் சுற்றி த்திரிந்த சிறுத்தை பெருந்துறை ஆர்.எஸ். பண்ணை நகரில் இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அங்கு சிறுத்தை வந்ததற்கான எவ்வித தடய மும் இல்லை.

    இது குறித்து வன அலு வலர் சுரேஷ் கூறியதாவது:-

    சிறுத்தையை பிடிக்க 9 கூண்டுகள் அமைத்து உள்ளோம். 21 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள், 7 சிற ப்பு குழுக்கள் அமைத்து சிறுத்தை யை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் அச்சம் அடையாமல் இருக்கவும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பொதுமக்களை பீதி அடைய செய்யும் வகை யில் சிலர் தவறான தகவல் களை பரப்பி வருகின்றனர்.

    எனவே அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்க ளில் யாரும் பதிவிட வேண்டாம். சிறு த்தையை பார்க்காமல் பொய்யான தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

    பொதுமக்களும் அது போன்ற தகவலைகளை நம்பி பீதி அடைய வேண்டாம். விரைவில் சிறுத்தை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×