என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்று பாதை அமைக்காமல் தரைமட்ட பாலம் இடிப்பு
    X

    மாற்று பாதை அமைக்காமல் தரைமட்ட பாலம் இடிப்பு

    • உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • மாற்று பாதை அமைக்காமல் பாலம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சி எரங்காட்டூர்–சஞ்சீவிராய குளம் செல்லும் சாலையில் பெரும்பள்ளத்தின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் தரைமட்ட பால த்தை இடித்து விட்டு உயர்மட்ட பாலம் கட்டு வதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மாற்று பாதை அமைக்காமல் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்நிலையில் அவ்வழியாக செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கா மல் தரைமட்ட பாலத்தை பொக்லைன் கொண்டு இடிக்கும் பணியை நெடு ஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் அந்த வழியாக செ ல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    பெரும்பள்ளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக தரைமட்ட பாலத்தை இடிக்கும் பணியை பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஆனால் அவ்ழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் இறங்கி செல்கின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மாற்று ப்பாதை இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து தவித்து வருகின்ற னர்.

    இவ்வழியாக ஜெ.ஜெ நகர், அண்ணாநகர், கொளத்துக்காடு சேட்டு காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராம ங்களில் இருந்து கோபி மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு பல்வேறு அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்களை பய ன்படுத்தி கோபி செல்லும் கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல்வோர், கள்ளிப்பட்டி செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மாற்றுப்பாதை இல்லா ததாலும், பஸ்கள் வர முடி யாததாலும் பெரும் அவதி க்குள்ளாகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் ஆம்பு லன்ஸ் கூட வர முடியாத நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். மேலும் பஸ் போக்குவரத்து இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மற்றும் மாணவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ள னர்.

    Next Story
    ×