என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் வியாபாரி கடம்பூரில் சாவு
    X

    குன்னூர் வியாபாரி கடம்பூரில் சாவு

    • அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (49). குன்னூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 19 வயதில் மகளும், 17 வயதில் மகனும் உள்ளனர்.

    குன்னூர் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் விஜயரா கவனின் வியாபாரம் பாதிப்புக்குள்ளானது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மேட்டுப்பாளையம் செல்வதாக கூறிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து விஜயராகவனின் அண்ணன் ஜெயராமன் (56) குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக விஜயராகவனின் அண்ணன் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஜெயராமன் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று பார்த்த போது மீட்கப்பட்டிருப்பது தனது தம்பி விஜயராகவன் தான் என அடையாளம் காட்டினார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×