search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிலாளி கீழே விழுந்து சாவு
    X

    கட்டிட தொழிலாளி கீழே விழுந்து சாவு

    • வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி லீலாவதி ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர்.

    Next Story
    ×